Author: Seyed Sulthan Ibrahim

அமைச்சர் தங்கம் தென்னரசு விழிப்புணர்வு உறுதிமொழி

விருதுநகர் ஆகஸ்ட், 12 காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது,…

வீடு தோறும் விருட்சம் திட்டத்தின் கீழ் அனைவரும் நட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை

தஞ்சாவூர் ஆகஸ்ட், 12 தஞ்சை அருகே உள்ள திட்டை பிரிவு சாலையில் நல்லி குப்புசாமி கலைக்கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி தாளாளர் வெள்ளைச்சாமி நாடார், முதல்வர் ஜெபஜோதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ்…

விவசாயிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

சிவகங்கை ஆகஸ்ட், 12 முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பான மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அய்யனார்…

மாவட்ட அளவிலான தேர்வுக் குழு நேர்காணல் கூட்டம்.

திருவாரூர் ஆகஸ்ட், 12 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. இதனை தாட்கோ…

போதைக்கு எதிரான சங்கங்கள் துவக்க நிகழ்வு.

நெல்லை ஆகஸ்ட், 12 பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் போதை பொருள்களுக்கெதிரான ஆசிரியர், பெற்றோர், மாணவ,மாணவியர்கள் அடங்கிய 5 சங்கங்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் தொடங்கி வைத்து பள்ளி மாணவமாணவியர்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். உடன் மாவட்ட…

மீன்பிடி துறைமுக பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை.

ராமேசுவரம் ஆகஸ்ட், 12 ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுக பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்த வசதியாக…

கோவை சாலையில் பதிக்கப்பட்ட எரிவாயு குழாயில் உடைப்பு

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 12 எரிவாயு குழாய் பதிக்கும் பணி கோவை மாநகரின் பல்வேறு பகுதியில் மத்திய அரசின் நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி கோவை விளாங்குறிச்சி-தண்ணீர்பந்தல் சாலை பகுதியில்…

மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.

நல்லம்பள்ளி ஆகஸ்ட், 12 தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மா.குட்டூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி எடுத்து ஊர்வலம்…

கோவா அணிக்காக விளையாடும் அர்ஜூன் டெண்டுல்கர்.

புதுடெல்லி ஆகஸ்ட், 12 இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 22 வயதான அர்ஜூன் 2020-21-ம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடினார்.…

மாநகராட்சி அலுவலகத்தை கேபிள் டி.பி. ஆபரேட்டர்கள் முற்றுகை.

திண்டுக்கல் ஆகஸ்ட், 12 திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கேபிள் டி.வி. இணைப்புக்கு வயர்களை கொண்டு செல்வதற்கு தளவாடகை கட்டணம் செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது இதனால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கவலை அடைந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று…