Spread the love

தஞ்சாவூர் ஆகஸ்ட், 12

தஞ்சை அருகே உள்ள திட்டை பிரிவு சாலையில் நல்லி குப்புசாமி கலைக்கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி தாளாளர் வெள்ளைச்சாமி நாடார், முதல்வர் ஜெபஜோதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் தலைமை தாங்கி கல்லூரி வளாகத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் கட்டிட வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.

இவ்விழாவில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் 400 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இவ்விழாவில் வட்டாட்சியர் மணிகண்டன், கவின் மிகு நஞ்சை இயக்கத்தின் சார்பில் ராதிகாமைக்கேல், செல்வராணி, ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம், உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *