Author: Seyed Sulthan Ibrahim

மாவட்ட மருந்துகள் பண்டக கிடங்கு ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 18 காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள மாவட்ட மருந்துகள் பண்டக கிடங்கினை தமிழ்நாடு அரசு பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் தீபக்சேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, இணை இயக்குனர் கிருஷ்ணகுமாரி, அறிஞர்…

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பணியாளர்கள் பட்டை நாமம் அடித்து போராட்டம்.

கள்ளக்குறிச்சி அக், 18 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் 28 பேர் கடந்த 17 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டிராக் முறையில்…

2023 ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும். கிரிக்கெட் கவுன்சில் தலைவர் அறிவிப்பு.

மும்பை அக், 18 அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளரும்,…

நரமாமிசம் சாப்பிட்ட கொலையாளிகள் 3 பேருக்கு மருத்துவ பரிசோதனை.

திருவனந்தபுரம் அக், 18 கேரளாவில் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரை சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவி லைலா. இவர்களுக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷபி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஷபி மந்திரவாதி என அறிமுகப்படுத்தி கொண்டு அவர்களிடம் பழகி உள்ளார்.…

தீபாவளி பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை.

நெல்லை அக், 18 தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையும் ஒன்றாகும். இந்த கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இதற்காக முந்தைய நாள் இரவிலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடு, கோழி…

ஐ.நா. பொதுச் செயலாளர் இன்று இந்தியா வருகை

நியூயார்க் அக், 18 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1,…

தமிழ் வழியில் மருத்துவ படிப்பு. தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை.

புதுச்சேரி அக், 18 புதுச்சேரியில் நடைபெற்ற மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழாவில், புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, “புதுச்சேரியில் தமிழில் மருத்துவக் கல்வியை கொண்டு…

62 நாடுகள், 18 மாதம் மோட்டார்சைக்கிளில் உலகை சுற்ற காதல் மன்னன் திட்டம்.

சென்னை அக், 18 அஜித்குமார் என்றாலே கார் பைக் ரேஸ் கலக்குபவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சினிமாவில் நடிப்பதோடு ஓய்வு நேரங்களில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெல்ஜியம்,…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரேஷன் அட்டையுடன் திரண்டு வந்த கிராம மக்கள்.

நெல்லை அக், 18 நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா மலையன்குளம் ஊராட்சி மாதுடையார்குளம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்மார்ட் ரேஷன் அட்டையுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களின் ரேஷன் அட்டையை திரும்ப ஒப்படைக்க…

சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை.

திருவள்ளூர் அக், 18 திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை, திருத்தணி, அரக்கோணம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ரயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கப்பாதை இல்லாத…