Month: October 2022

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் 223 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்.

தென்காசி அக், 12 சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், மகாஜன சங்கத்தின் துணைத்தலைவர்…

மகளிர் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் அக், 12 அரசினர் மகளிர் கல்லூரி முன்பு கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மகேஸ்வரி தலைமை தாங்கினார். மங்களம், சுமத்ரா, பாரதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் அரசாணையை பின்பற்றி கவுரவ…

மாதவரம் பால் பண்ணையில் இருந்து மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பணிகள் தொடக்கம் .

சென்னை அக், 12 சென்னையில் 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரூ.61 ஆயிரத்து 841 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் சேவைக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் 3-வது வழித்தடமான மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் முக்கியமான பணியான சுரங்கம்…

ஆதார் எண்ணுடன் புதிய விவரங்களை சேர்க்க வேண்டும் ஆதார் முகமை அறிவுறுத்தல்.

புதுடெல்லி அக், 12 10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்களை வழங்கும் அரசு முகமை (யு.ஐ.டிஏ.ஐ.) நேற்று…

இணையதள மோசடியில் ஈடுபட்ட 109 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்.

நெல்லை அக், 12 நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் சைபர் மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்வது உள்ளிட்டவைகள் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து…

பாம்பன் பாலத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.

ராமேஸ்வரம் அக், 12 சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து பாம்பன் சாலை பாலத்தில் சென்று கொண்டிருந்தது. பாம்பன் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கார் மற்றும் வேன்களை வழித்தடத்தில் நிறுத்தி வைத்து விட்டு கடலை…

மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 12 வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனைக்கு உள்ளே நடைபெற்று…

கல்வராயன்மலையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு.

கள்ளக்குறிச்சி அக், 12 கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலையில் உள்ள விளை நிலங்களில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுமார் 900 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கைப்பற்றி, அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராய…

உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை. சாலையோர பள்ளத்தில் கொட்டப்பட்ட சம்பங்கி பூக்கள்.

ஈரோடு அக், 12 சத்தியமங்கலத்தில் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் பூக்கள் ஏலம் நடைபெறும். சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். வழக்கம்போல் நேற்று…

விழுப்புரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.

விழுப்புரம் அக், 12 மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு கிராமிய பேண்டு கூட்டுக்குழலிசை நலச்சங்கத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து தொடங்கி…