Spread the love

தென்காசி அக், 12

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், மகாஜன சங்கத்தின் துணைத்தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.

வாசுதேவநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் 108 மாணவர்களுக்கும், 115 மாணவிகளுக்கும் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், வாசுதேவநல்லூர் ஒன்றிய மதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார், புளியங்குடி நகர செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *