தென்காசி அக், 7
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், அரசு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவருமான விருதுநகர் மாவட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சுப்பிரமணியத்தின் மீது கடந்த கால ஆட்சியின்போது எடுத்த தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை முழுவதுமாக ரத்து செய்து அவருக்கு நிரந்தர ஓய்வு மற்றும் அதற்குரிய பணபலன்களை வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மேலும் அலுவலக ஊழியர்களும் நிதி வழங்கினர்.