Month: August 2022

சேதுக்கரை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் பராமரிக்க வேண்டுகோள்.

கீழக்கரை ஆகஸ்ட், 11 ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை செல்லும் பாதையில் உள்ளது ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆலயம். இங்கு அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயம் நன்றாக பராமரிக்கப்பட்டால் சேதுக்கரையில் கடலில் குளித்து வரும் பக்தர்கள் நீராடவும் வசதியாக இருக்கும்…

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் ஆகஸ்ட் 11 மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தா.பழூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆரோக்கியமேரி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் பார்வதி, ரேவதி…

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு, பிரியாணி விருந்து.

மாமல்லபுரம் ஆகஸ்ட், 11 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். மேலும் போட்டிகளில் பங்கேற்க வந்த வீரர்களின் பாதுகாப்புக்காக…

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது

திருகோணமலை ஆகஸ்ட், 11 இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 9 இந்திய (தமிழக) மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் இந்திய (தமிழக) மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடி படகுகள் அரசுடைமையாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தலையிட்ட…

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி நிறத்தில் ஒளிரும் பாட்சா அணை.

மும்பை ஆகஸ்ட், 11 இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாட்சா அணை, தேசியக் கொடி நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது. இவ்விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி கடந்த ஜூலை…

உச்ச நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதி நியமனம்.

புதுடெல்லி‌ஆகஸ்ட், 10 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ல் நிறைவடைகிறது. எனவே, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக…

கிரீஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்தது

ஏதென்ஸ் ஆகஸ்ட், 10 துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது. இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில்…

புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றவர்கள் கைது.

பெரம்பலூர் ஆகஸ்ட், 10 பெரம்பலூரை அடுத்த க.எறையூர் அருகே பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மருவத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 ஆயிரத்து…

வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை.

கரூர் ஆகஸ்ட், 10 கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கரூர் காமராஜ் நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.…

கொல்லிமலையில் பழங்குடியினர் தினவிழா.

கொல்லிமலை ஆகஸ்ட், 10 நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நேற்று நடந்த உலக பழங்குடியினர் தின விழாவில் 250 நபர்களுக்கு ரூ.2.38 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். இவ்விழாவுக்கு மாவட்ட…