Month: August 2022

கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுரை.

நீலகிரி ஆகஸ்ட், 17 ஊட்டி அருகே நஞ்சநாடு ஊராட்சி சமுதாயக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் ஊராட்சியில் அனைவருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் செயல்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின்…

ஆவணி திருவிழா இன்று கொடியேற்றம்.

திருச்செந்தூர் ஆகஸ்ட், 17 முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள்…

புதிய கூடுதல் மின்மாற்றியை முதலமைச்சர் காணொலி காட்சியில் தொடக்கம்.

மதுரை ஆகஸ்ட், 17 தமிழகம் முழுவதும் பல்வேறு மின்சாரத்துறை சார்ந்த திட்டங்களை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை துணை மின் நிலையத்தில் சுமார்…

நாற்காலிகளை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்.

நாகர்கோவில் ஆகஸ்ட், 17 நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் 300 நாற்காலிகளை வழங்கி இருக்கிறார். இந்த நாற்காலிகளை ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் டாக்டர் கிளாரன்ஸ் டெவி…

மாநகராட்சி அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு.

நெல்லை ஆகஸ்ட், 17 நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மேயர் சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.…

கனல் கண்ணன் கைதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 17 பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து முன்னணி…

புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு சீல்.

தர்மபுரி ஆகஸ்ட், 17 தர்மபுரி மாவட்டத்தில், வெள்ளோலை பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே நகுலன் என்பவர் மளிகை கடை நடத்தி வந்தார். அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மதிகோன்பாளையம் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல்…

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 17 கோயம்புத்தூர் மருத்துவர் காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்கள் முழு பலன் கிடைக்கும் வகையில் நடைமுறை படுத்தி சந்தா தொகையை ரூ.350 ஆக குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா.

நெல்லை ஆகஸ்ட், 17 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதான புரத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் பழமை வாய்ந்த இந்த குடியிருப்பு சிதிலமடைந்து காணப்பட்டதால் அந்த குடியிருப்பு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கட்ட…

மத்திய அரசைப்போன்று மாநில அரசு, அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தல்.

அரியலூர் ஆகஸ்ட், 17 அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில்,…