Month: August 2022

மாணவி ஸ்ரீமதி மரணம். பள்ளி தாளாளர், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.

விழுப்புரம் ஆகஸ்ட், 18 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இவ்வழக்கு குற்றப்…

இ-சேவை மையங்கள் மூலம் தமிழ் வழியில் படித்தற்கான சான்றிதழ் – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை ஆகஸ்ட், 18 பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம்…

விதிகளை மீறி செயல்பட்ட குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி சாலை மறியல் போராட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை மாவட்டம், அணைந்த நாடார்பட்டியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. நெல்லை கல்குவாரி விபத்தை தொடர்ந்து இந்த கல்குவரி மூடப்பட்டது. ஏற்கனவே இந்த கல்குவாரியில் அரசு விதியை மீறி வெடி மருந்து வெடித்தாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு…

குளச்சல் மீன்பிடி துறைமுகங்களில் மலை போல் குவிந்த மீன்கள்.

குளச்சல் ஆகஸ்ட், 18 குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள்…

ஆடி மாத கொடை விழா. பக்தர்களுக்கு அன்னதானம்.

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை சந்திப்பு முத்தாரம்மன் கோவிலில் ஆடி மாத கொடை விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற…

அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதே இலக்கு – அமைச்சர் சக்கரபாணி .

திண்டுக்கல் ஆகஸ்ட், 18 பழனி அருகே தாழையூத்துவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு பழனி வருவாய் மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி தலைமை…

முன்னாள் பிரதமா் அடல்பிகாரி வாஜ்பாயின் நினைவு தினம்.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 18 மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் சித்தா்காடு சம்மந்தங்குளம் பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவா் பிரபாகா் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட பொதுச்செயலாளா் பாலு…

நீர்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி.

தர்மபுரி ஆகஸ்ட், 18 தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அனுமதி வழங்கினார். அருவியில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மெயின்…

கிருஷ்ண ஜெயந்தி வண்ணபானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில்களில் ஒன்றான அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி 3 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 19 ம் தேதி முதல் 21 ம்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்.

செங்கல்பட்டு ஆகஸ்ட், 18 செங்கல்பட்டு மாவட்டம் குன்னவாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்னம்மாள் முன்னிலை வகித்தார். மேலும் சுதந்திர தின கலை நிகழ்ச்சிபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…