Category: மாவட்ட செய்திகள்

முல்லை கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடக்கம்.

கடலூர் அக், 1 கடலூர் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் புதிய ஜவுளி ரகங்களை பார்வையிட்டார்.…

ரூ.57 லட்சம் மதிப்பிலான தரமற்ற விதைகள் பறிமுதல். குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்.

நெல்லை அக், 1 நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் அசோக்குமார் பேசியதாவது,விவசாயிகளுக்கு அடிப்படை இடு பொருள்களான…

விற்பனை பொருட்களில் திடீர் தீ விபத்து.

அரியலூர் அக், 1 ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் கணேஷ் என்பவர் காலணி, ஷூக்கள் மற்றும் பேக்குகள் வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட காலணிகள் மற்றும் ஷூக்கள், பேக்குகள் மாடி அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த…

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டி பயிலரங்கம்.

தூத்துக்குடி செப், 30 திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 44 மற்றும் 48-ல் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டி பயிலரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

தர்மபுரி செப், 30 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சக்திவேல்…

காந்தி ஜெயந்தியன்று 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருவள்ளூர் செப், 30 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2 ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.…

தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சிவகங்கை செப், 30 இளையான்குடி மருத்துவர் சாகிர் உசேன் கல்லூரியில் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டல் படி கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர்…

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான பணிக்குழு.

திருவண்ணாமலை செப், 30 குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான பணிக்குழு, கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழு மற்றும் இ-ஸ்ரம் மாவட்ட அளவிலான செயல்பாட்டு குழு ஆகியவற்றின் கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட…

கெங்கநல்லூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகமில் நலத்திட்ட உதவிகள்.

வேலூர் செப், 30 அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கநல்லூர் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு வட்டாட்சியர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார்…

தமிழக- ஆந்திர எல்லையில் போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத்துறை சோதனை.

வேலூர் செப், 30 ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது. பேருந்துகள், ரயில்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக கஞ்சா கடத்தல் நடைபெறுவதை தடுக்க போதைப்பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தடுப்பு நடவடிக்கையில்…