Spread the love

அரியலூர் அக், 1

ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் கணேஷ் என்பவர் காலணி, ஷூக்கள் மற்றும் பேக்குகள் வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட காலணிகள் மற்றும் ஷூக்கள், பேக்குகள் மாடி அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் திடீரென தீப்பற்றி, கரும் புகையாக புகைந்து, புகைமூட்டம் வந்ததை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து கணேசனிடம் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் மற்றும் மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் உள்ளிட்ட குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *