Month: November 2022

தொடர் மழையால் சந்திரசேகரபுரம் கிராமத்தில் 500 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்.

ராசிபுரம் நவ, 15 கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள 126 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணைப்பாளையம் ஏரி, 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட குருக்கபரம் ஏரி, பட்டணம்…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.

நாகப்பட்டினம் நவ, 15 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நோய் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்…

மதுரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்.

மதுரை நவ, 15 ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டும், ஜெயலலிதா வின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும்,…

கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 5வது நாளாக தொடர்ந்து போராட்டம்.

கிருஷ்ணகிரி நவ, 15 தளி தொகுதி தேன்கனிக்கோட்டை அடுத்த கொரட்ட கிரியில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகளால் அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும், பொது மக்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதியுள்ளாவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கல்குவாரிகளில்…

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 800 கன அடியாக குறைப்பு.

காஞ்சிபுரம் நவ, 15 வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்…

பயிர் கடன் தர மறுப்பதாக கூறி கடுவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகை.

கள்ளக்குறிச்சி நவ, 15 மூங்கில்துறைப்பட்டு ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியான பாக்கம், புதூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வைப்பு…

சரக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 400 கிலோ குட்கா பறிமுதல்.

ஈரோடு நவ, 15 பவானியை அடுத்த சித்தோட்டில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அந்த காரை ஒரு சரக்கு ஆட்டோ முந்திச்செல்ல முயன்றது. அப்போது சரக்கு ஆட்டோ காரின் பின்பக்கத்தில் எதிர்பாராத வகையில்…

சர்வீஸ் சாலை அமைக்க. குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு.

தர்மபுரி நவ, 15 தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். இதில் பாலக்கோடு அருகே உள்ள பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் மயானம் அமைக்க வலியுறுத்தி திரண்ட பொதுமக்கள்.

கோயம்புத்தூர் நவ, 15 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி…

மழை நீர் தேங்காமல் இருக்க கால்வாய் அடைப்புகள் சீரமைப்பு.

வண்டலூர் நவ, 15 செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், அமுதம் காலனி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும் போது அந்த பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துவிடுவது வழக்கம். இந்த ஆண்டு மகாலட்சுமி நகர் பகுதியில்…