Month: October 2022

விருத்தாசலம், திட்டக்குடி பகுதி காவல் வாகனங்களை துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

கடலூர் அக், 6 விருத்தாசலம், திட்டக்குடி உட்கோட்ட காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கடலூர் மாவட்ட காவல்துறை வாகன பிரிவு சார்பில் நடந்த…

கோவைக்கு தங்கம் கடத்தல், 2 பேர் கைது.

கோயம்புத்தூர் அக், 6 சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ரூ.2.45 கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை வருவாய் புலனாய்வு…

பாலக்காடு அருகே இரு பேருந்துகள் மோதி விபத்து.

திருவனந்தபுரம் அக், 6 கேரளாவின் பாலக்காட்டில் உள்ள வடக்கன்சேரியில் சுற்றுலா சென்ற பள்ளிப் பேருந்தும், எதிரே வந்த அரசு பேருந்தும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர் என்றும், மேலும் 40க்கும் மேற்பட்டோர்…

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா பயணம்.

மும்பை அக், 6 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா,…

சாலை விதிகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர் கோரிக்கை.

ராமநாதபுரம் அக், 5 2022 ம்ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை சாலை விபத்துகளில் 249 பேர் பலியாகி இருக்கிறார்கள். எனவே அனைவரும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேனில் கடத்தி வந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்.

தஞ்சாவூர் அக், 5 தஞ்சையை அடுத்த வல்லம் – ஒரத்தநாடு சாலையில் உள்ள மின்நகர் பகுதியில் வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் நித்தியா தலைமையில் வல்லம் ஆய்வாளர் செந்தில்குமார், துணை ஆய்வாளர் மோகன் மற்றும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.…

பாளை அருகே இன்று காலை விபத்து. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்.

நெல்லை அக், 5 நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவர் சீவலப்பேரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வசூலுக்காக செல்வது வழக்கம். இன்று கடைக்கு வந்த அவர் பின்னர் மோட்டார்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்.

திருவாரூர் அக், 5 சேதமடைந்த குறுவை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய், மழையில் சேதமடைந்த குறுவை பயிருக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய்…

மீட்புபணி அலுவலர்களுக்கான ஒத்திகை நிகழ்ச்சி.

நாமக்கல் அக், 5 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாமக்கல் மாவட்ட மீட்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை…

மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜையை சாலை பணியாளர்கள் கொண்டாட்டம்.

கரூர் அக், 5 நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் அவர்கள் நேற்றே தாங்கள் பணிபுரியும் இடங்களில் ஆயுத பூஜையை கொண்டாடினர். அதன்படி புலியூர் வையம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் பணிபுரியும் சாலை பணியாளர்கள், நேற்று உப்பிடமங்கலம் அருகே…