Spread the love

தஞ்சாவூர் அக், 5

தஞ்சையை அடுத்த வல்லம் – ஒரத்தநாடு சாலையில் உள்ள மின்நகர் பகுதியில் வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் நித்தியா தலைமையில் வல்லம் ஆய்வாளர் செந்தில்குமார், துணை ஆய்வாளர் மோகன் மற்றும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அதில் 170 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. பின்னர் வேனை ஓட்டிவந்தவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும் பறிமுதல் விசாரணையில், அவர் தஞ்சை வெட்டுகார தெருவை சேர்ந்த கிரிதரன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வல்லம் வழக்குப்பதிவு செய்து கிரிதரனை கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 170 கிலோ புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேன் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பலரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *