Category: மாவட்ட செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

தஞ்சாவூர் ஆக, 28 தஞ்சை தூய பேதுரு பள்ளியில் 1976ம் ஆண்டு படித்த மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தனர். இவர்கள் ஆண்டுதோறும் தஞ்சையில் ஒன்று கூடி சந்தித்து கொள்கின்றனர். கடந்த இரண்டு…

மரம் விழுந்து அரசு பள்ளி சமையலறை சேதம்.

கரூர் ஆக, 28 அரவக்குறிச்சி அருகே கணக்குப்பிள்ளை புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பள்ளியின் சமையல் அறை அருகே இருந்த மரம் ஒன்று சாய்ந்து சமையல் அறையின் மீது விழுந்தது. இதனால் சமையல்…

300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

திண்டுக்கல் ஆக, 28 திண்டுக்கல்லில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அரசு தடை செய்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. இந்த…

பொறியியல் கலந்தாய்வு, செப்டம்பர் மாதம் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

சென்னை ஆக, 28 தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கலந்தாய்வு செப்டம்பர் 10 ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான கலந்தாய்வு…

கீழக்கரையில் கொரோனா தடுப்பூசி முகாம்.

கீழக்கரை ஆக, 28 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முஹைதீனியா பள்ளி வளாகத்தில் நேற்று பொது சுகாதாரத் துறை மற்றும் வடக்குத்தெரு சமூக நல அமைப்பு இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதாரபணிகளின் துணை இயக்குனர் அஜித் பிரபு குமார்…

புற்றுநோய் மருத்துவமனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை.

காஞ்சிபுரம் ஆக, 28 காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்ட டெலிகோபால்ட் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்…

உத்தனூரில் ரூ.16.85 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம்.

தர்மபுரி‌ ஆக, 28 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட உங்கரானஅள்ளி ஊராட்சி உத்தனூர் கிராமத்தில் ரூ.16.85 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சட்ட மன்ற உறுப்பினர்…

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு

கடலூர் ஆக, 28 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேதி பொறியியல் துறை சார்பில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் 2022 என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச மாநாடு நடந்தது. மத்திய அரசின் அறிவியல் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில், இந்திய…

தோட்ட பகுதியில் குட்டியுடன், தாய் யானை இறப்பு.

கோயம்புத்தூர் ஆக, 28 கோவை மாவட்டம் வால்பாறை பன்னிமேடு, சோலையார், தாய்முடி, அக்காமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதில், ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இதில் கர்ப்பிணி யானை…

மதுபாட்டில்கள் பறிமுதல். குற்றவாளிகள் கைது.

அரியலூர் ஆக, 28 அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் துணை ஆய்வாளர் லோகநாதன் மற்றும் காவல் துறையினர். நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய விசாரணையில், மீன்சுருட்டி அருகே உள்ள கைலாசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை…