Category: மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு உழவர் செயலி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்.

மயிலாடுதுறை நவ, 16 பரிச அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பட்டமங்கலம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு உழவர் செயலி குறித்த…

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது.

கரூர் நவ, 16 கரூர் டவுன் காவல் ஆய்வாளர் அப்துல்லா உள்ளிட்ட காவலர்கள் நேற்று கரூர்-கோவை சாலை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, லாட்டரி சீட்டுகளை விற்றதாக, தான்தோன்றிமலை அருகே உள்ள வெங்ககல்பட்டியை சேர்ந்த…

ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

நாகர்கோவில் நவ, 16 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. ஊர்க்காவல் படையில் சேர…

தேர்தல் விழிப்புணர்வு பாட்டுப்போட்டி.

சிவகங்கை நவ, 16 சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நேற்று “தேர்தல் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு பாட்டுப்போட்டி” நடைபெற்றது. இப்போட்டியில் மாணவிகள் கலந்துகொண்டு தேர்தலில் 100% வாக்களிப்பு, வாக்களிக்க பணம் பெறக்கூடாது, வாக்களிப்பதன்…

பால் விலை உயர்வை கண்டித்து 32 இடங்களில் பாரதியஜனதாகட்சி வினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் நவ, 16 தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரத்தில் மின்வாரிய அலுவலகம் அருகே பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன்…

முதல் தனியார் ராக்கெட் 18 ம்தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.

சென்னை நவ, 16 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுவதுமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வருகிற 18 ம்தேதி காலை 11.30 மணி அளவில் விண்ணில்…

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் நவ, 16 பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு மற்றும் சாலையில் பராமரிப்பு ஆகியவற்றை கண்டித்து, திருப்பூர் வடக்கு மாவட்டம்0கொங்கு நகர் மண்டலம், பாரதிய ஜனதா கட்சி சார்பில். கொங்கு மெயின் ரோடு , சின்னசாமி அம்மாள்…

காவல்துறையினர் வாகன சோதனை. விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு.

கடலூர் நவ, 16 கடலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவு பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டதிற்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில்…

பத்திரிகையாளர்களுக்கு முதல் வாழ்த்து.

சென்னை நவ, 16 இன்று தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன என்று கூறிய அவர் நேர்மையும் நெறியும் தவறாது…

ஓட்டப்பிடாரம் பகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாம்.

தூத்துக்குடி நவ, 15 தமிழகம் முழுவதும் நவம்பர் 12,13,26,27 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் போன்றவைகளுக்கு தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்திருக்கிறது. இந்த பணி சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களிலும் நடந்தது. நேற்று ஓட்டப்பிடாரம் பகுதிகளில்…