Category: மாவட்ட செய்திகள்

வட்டாட்சியார் அலுவலகத்தில் முற்றுகையிட்ட கிராம மக்கள்.

திண்டுக்கல் நவ, 18 வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில் 20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். மேலும் அந்த நிலத்துக்கு வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் அவர் மனு கொடுத்துள்ளார். இதனை அறிந்த கல்வார்பட்டி கிராம மக்கள்…

பண்ருட்டியில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்.

கடலூர் நவ, 18 சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம்1ம் தேதி முதல் 60 நாட்கள்நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதனையடுத்து கார்த் திகை முதல் நாளை முன்னிட்டு பண்ருட்டி…

தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள்.

திருப்பூர் நவ, 18 திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் அரசு அரசு அலுவலர்கள் உள்ளனர்.

அசத்திய பள்ளி சிறுவன். இயக்குனர் பாராட்டு.

ராமநாதபுரம் நவ, 17 பெங்களூருவில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில் பாஞ்சாலி குறும்படம் தேர்வாகி முதலிடம் பிடித்தது. இதில் ராமநாதபுரம் திருப்புல்லாணி அரசு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் தீபக் நடித்திருந்தார். ஆடு மேய்க்கும் தாத்தா தன் பேரனை ஆடு மேய்க்க…

இயற்கை மருத்துவ படிப்பு தர வரிசைப் பட்டியல் வெளியீடு.

சென்னை நவ, 17 சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 5 அரசு மற்றும் 26 தனியார் கல்லூரிகளில் மொத்தம் 1,940 இடங்களுக்கு 4,386 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தலா 7.5%…

மீனவர்கள் விடுதலை. இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

ராமேஸ்வரம் நவ, 17 ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடந்த 5ம் தேதி தனுஷ்கோடி தலைமன்னார் அருகே இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்களை இலங்கை காவல் படையினர் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்ய கோரி மீனவர்கள் போராடி வந்தனர். இந்த…

பிரியாவின் வீட்டிற்க்கு செல்கிறார் முதல்வர்.

சென்னை நவ, 17 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மறைந்த கால்பந்து வீரர் பிரியாவின் வீட்டில் துக்கம் விசாரிக்க செல்கிறார். தேசிய அளவில் மகளிர் கால்பந்து போட்டிகளை விளையாடிய பிரியாவுக்கு காலில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வலது…

மாலை அணிய கோவிலில் குவிந்த பக்தர்கள்.

சென்னை நவ, 17 கார்த்திகை தொடங்கியுள்ளதால் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மாதத்தில் ஐயப்பனை வழிபட போவது வழக்கம். அதற்காக இன்று அதிகாலையிலேயே பல கோவில்களில் மாலை அணிய பக்தர்கள்…

6.85 கோடி பேர் வருமான வரி தாக்கல்.

சென்னை நவ, 17 2021-22 ம் நிதியாண்டில் 7.14 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். இந்நிலையில் 6.85 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2021-22 ஆண்டுக்கான தனிநபர் வருமான வரி…

சாலை விரிவாக்க பணியினை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆய்வு.

விழுப்புரம் நவ, 16 சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோட்டில் இருந்து செல்லியம்பாைளயத்திற்கு தார் சாலை ஒன்று செல்கிறது. அந்த 20 அடி சாலையை செல்லியம்பாளையம், ராயப்பனூர், பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள…