விழுப்புரம் நவ, 16
சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோட்டில் இருந்து செல்லியம்பாைளயத்திற்கு தார் சாலை ஒன்று செல்கிறது. அந்த 20 அடி சாலையை செல்லியம்பாளையம், ராயப்பனூர், பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வி.கூட்ரோடில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. கால்நடை ஆராய்ச்சி பூங்கா நிர்வாகத்தினர் இந்த சாலை பகுதியில் பல்வேறு கட்டிடப் பணிகள் மேற்கொண்டு வருவதால் வருங்காலங்களில் இந்த சாலையில் கிராம மக்கள் செல்வதற்கு நிரந்தரமாக தடை செய்யப்படலாம் என்று கருதி மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட சாலையை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் மணி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, சின்னசேலம் யூனியன் சேர்மேன் சத்தியமூர்த்தி, சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆய்வில் பங்கேற்றனர்.