விழுப்புரம் நவ, 19
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாசிலாமணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி வட்டக்குழு கருணாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், கரும்பு விவசாயிகள் சங்கம் கோவிந்தராஜ், மாநில குழு லட்சுமி, ஏழுமலை, மாவட்ட குழு ராமமூர்த்தி, ஏழுமலை, செல்வம் வட்டக் குழு அமுதா, முனுசாமி, தேவி, சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.