Spread the love

விழுப்புரம் நவ, 21

கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கங்கை டவுன் போலீஸ் நிலைய எல்லை அருகே ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் துணை ஆய்வாளர் ஆனந்தராசன், தலைமையிலான சிறப்பு துணை ஆய்வாளர் சிவகுமார், தலைமை காவல்துறையினர் கணேசன், சபரி மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் திண்டிவனத்தில் உள்ள கோவில், சர்ச், மசூதி ஆகிய இடங்களில் பலத்த காவல் நிலைய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திண்டிவனத்தில் உள்ள தங்கும் விடுதியில் சந்தேக படும் படியான நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா எனவும் காவல் துறையினர் சோதனை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *