விழுப்புரம் ஜூலை, 10
2016 சட்டப்பேரவை தேர்தலில் வென்ற திமுகவின் ராதாமணி 2019 ஜூன் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றார். பின்னர் 2021 தேர்தலில் திமுகவின் புகழேந்தி வந்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இதையடுத்து இன்று அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.