சென்னை ஜூலை, 9
இந்தியா-தென்னாபிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. முதலாவதாக போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால் பாதையில் கைவிடப்பட்டது 1-0 என்ற கணக்கில். முன்னிலை வகிக்கும் தென்னாபிரிக்க அணி அந்த உத்வேகத்தோடு தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதே நேரத்தில் கடைசி ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.