சென்னை ஜூலை, 7
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் ஜஸ்டின் ஆல்ட்ரின் தகுதி பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் தடகள அணியில் இடம் பிடித்த ராஜேஷ், சந்தோஷ், சுபா, பிரவீன் சித்திரவேல், வித்யா ராம்ராஜ், ஜெஸ்வின் ஆகிய ஆறு வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து அதிக தடகள வீரர்கள் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.