கன்னியாகுமரி மே, 29
குமரி விவேகானந்தர் தியான மண்டபத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்ய உள்ளார். விவேகானந்தர் தியான மண்டபத்தில் 31 ம் தேதி மாலை தியானத்தை தொடங்கும் அவர், ஜூன் ஒன்றாம் தேதி வரை இரவு பகலாக தியானத்தில் ஈடுபடுகிறார். ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பிரதமர் தியானம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது இதற்காக கன்னியாகுமரியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.