கன்னியாகுமரி ஏப்ரல், 16
தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் அடுத்த நான்கு மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என அறிவித்துள்ளது.