கன்னியாகுமரி ஜூன், 9
நேற்று இரவு சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாதவர்கள் பலர் ஏறியதாக தெரிகிறது. இதனால் எரிச்சல் அடைந்த பயணிகள் விருத்தாச்சலம் அருகே ரயிலில் நடுவழியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே ஊழியர்கள் சமாதானத்திற்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது அரியலூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யாதவர்கள் இறக்கி விடப்பட்டனர்.