கன்னியாகுமரி பிப், 9
குமரியில், பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவில் தை மாத திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகையிலும் நீலதயாட்சி அம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நாளை விடுமுறையாகும். அதே வேளையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும். ஏற்கனவே பிப்ரவரி 11 செவ்வாய் அன்று தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.