கன்னியாகுமரி ஆக, 27
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது தமிழக முதல்வர், 253 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட துறைமுக கட்டுமானப் பணிகளுக்கு உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கப்படும் என உறுதியளித்தார்.