Spread the love

திருவள்ளூர் ஏப்ரல், 7

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது, சென்னை திருத்தணி உள்ளிட்ட பல இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் மலைகள் சூழ்ந்து உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது இதனால் பனை ஓலை விசிறிகளை தேடி மக்கள் திரும்பி உள்ளனர். வெயிலுக்கு இதமான குளிர்ந்த காற்று தரும் பனைஓலை விசிகளை திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்கு உட்பட்ட விசிஆர் பண்டிகை கிராமத்தில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றன ஒரு ஜோடி ரூபாய் 60 க்கு விற்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் தயாரிக்கப்படும் விசிறிகள் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், வாலாஜா, ஆற்காடு ஆரணி, திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு சில்லரை விற்பனையாகவும், மொத்த விற்பனையாகவும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பனை ஓலை விசிறி விற்பனை அதிக அளவு இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் வியாபாரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *