திருவள்ளூர் ஏப்ரல், 15
தமிழகத்தில் மக்களவை தேர்தல் 19 ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பி உள்ளார். தொடர்ந்து இன்று திருவள்ளூர், வடசென்னை தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதே போல இபிஎஸ் இன்று மத்திய தென் சென்னையில் வாக்கு சேகரிக்க உள்ளார்.