நெல்லை ஏப்ரல், 15
தமிழக மக்களவைத் தேர்தல் 19 ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று எட்டாவது முறையாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு ஹெலிகாப்டர் மூலம் நாளை மாலை 4: 10 மணிக்கு நெல்லை அம்பாசமுத்திரம் வருகிறார். அங்கு நைனார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார்.