திருவள்ளூர் ஜூலை, 23
ஆடி கிருத்திகை 29ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனால் அம்மாவட்டத்திற்கு 29ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகளுக்கு 29ம் தேதி விடுமுறை. இதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.