திருவள்ளூர் ஜூன், 18
திருவள்ளூர் இளைஞர் தனுஷ் காதல் திருமண விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அவரது தம்பியை கடத்தியதாக காவல்நிலையத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சஸ்பெண்ட் ஆன துணை காவல்துறை இயக்குனர் ஜெயராம், திருவாலங்காடு காவல்நிலைய காவல்துறையினர் காவலில் சுமார் 25 மணி நேரம் இருந்தார். சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தியிடமும் 9 மணி நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரையும் விடுவித்தனர்.