Spread the love

விருதுநகர் பிப், 6

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோவில் வளாகத்தில் பக்தர்கள் அவசர தேவைக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் பாதுகாப்புக்காக துணை காவல் கண்காணிப்பாளர் வினோஜி உத்தரவின் பேரில் இருக்கன்குடி ஆய்வாளர் மயிலு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *