Spread the love

திருவள்ளூர் ஜன, 2

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையின் முகம், கையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல் துறையினர், சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும், இச்சம்பவம் குறித்து சோழவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பேத்கர் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *