கன்னியாகுமரி டிச, 24
பழையாற்றை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தானில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி அவரது 138- வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.