கன்னியாகுமரி டிச, 22
குமரி மாவட்டத்தில் பொதுமக்கள்பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனு அளிக்க நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வருகிறார்கள்.
அவ்வாறு வரும் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்குவதற்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலக கீழ்தள நுழைவு வாயில் அருகே ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அங்கு காவல் ஆய்வாளர் தலைமையில் மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. பின்னர் மனுவானது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் மனு வாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மாவட்டம் தோறும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி மனுக்கள் வாங்கி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.