Spread the love

கன்னியாகுமரி டிச, 19

குமரி மாவட்டம் பத்ப நாபபுரம் தொகுதிக்குட்பட்ட திருவட்டார் அருகே கிராம நிர்வாக அலு வலக வளா கத்தில் இ- சேவை மையம் செயல் பட்டுவருகிறது இங்கு திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மட்டு மல்லாது கோதையாறு, குற்றியாறு உள்ளிட்ட மலைவாழ் பகுதிகளில் இருந்தும் பல்வேறு மக்கள் ஆதார் திருத்தம் உட்பட பல்வேறு சேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த இ-சேவை மையத்தில் பதிவு இயந்திரம், பிரிண்டர் எந்திரம் பழுதாகி பல மாதங்களாகியும் சரி செய்யாததால் மலையோர பகுதிகளில் இருந்து பல கிலோமீட்டர் பயணம் செய்து தங்கள் கைகுழந்தைகளுடன் வந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முறையாக செயல்படாத இ-சேவை மையத்தை நம்பி வரும் பொதுமக்களை இங்குள்ள ஊழியர்கள் காலை முதல் மாலை வரை காத்திருக்க வைத்து பின்பு அலைகழிக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை இ-சேவை மையம் வந்த பொதுமக்களிடம் எந்திரம் பழுது என ஊழியர்கள் கூறிய நிலையில் இ-சேவை மையத்தின் வெளியே பொதுமக்கள் கைகுழந்தைகளுடனும் முதியவர்களும் காத்தி ருந்தனர் அப்போது பல்வேறு ஆய்வு பணிக்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பத்பநாபபுரம் மாவட்ட ஆட்சியர் கவுசிக் வந்தார்.

இதையடுத்து அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் தங்களின் அவலநிலை குறித்து வாக்குவாதம் செய்தனர். அதை தொடர்ந்து இ-சேவை மையத்தில் ஆய்வு செய்த துணை ஆட்சியர் கவுசிக் அனைத்து வசதிகளுடன் இ-சேவை யைம் செயல் படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *