கன்னியாகுமரி டிச, 26
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநகர முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.