Spread the love

நீலகிரி டிச, 12

குன்னூர் நகராட்சி 28-வது வார்டு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி மற்றும் நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் மணிகண்டன் நகர துணை செயலாளர் முருகேஷ், கிளை செயலாளர் லியாகத் அலி, பழனி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சையது மன்சூர் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *