நீலகிரி டிச, 14
நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், முதன்முறையாக பல்வேறு வகையான சாகச விளையாட்டுகள் அமைப்பதற்கான பூமி பூஜையினை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மேலாண்மை இயக்குநர், சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டனர்.