Spread the love

சின்னமுட்டம் ஆகஸ்ட், 9

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் பகுதியில் பலத்த காற்று காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலை கடந்த சில நாட்களாக நீடிக்கிறது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. முற்றுகை போராட்டம் ஆனால் சின்னமுட்டத்தில் இருந்து மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுடன் மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது நேற்று மாலையில் மீனவர்கள் சின்ன முட்டம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மீன் பிடிக்க அனுமதி வழங்ககோரி மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இரவிலும் போராட்டம் நீடித்தது. பின்னர் மீன்பிடிக்க செல்வதில் உறுதியாக இருப்பதாக கூறி அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *