Spread the love

கன்னியாகுமரி ஆகஸ்ட், 12

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை ராணுவ வீரர்கள் தேசியக்கொடியுடன் பாதயாத்திரை தொடங்கினர்.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை ராணுவ வீரர்கள் தேசியக்கொடியுடன் ‘திரங்கா யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்கினர்.

இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடந்தது. பிரிகேடியர் லலித் சர்மா தலைமை தாங்கினார். பாதயாத்திரியை மேஜர் பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து 75 ராணுவ வீரர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டனர்.

முன்னதாக 75 ராணுவ வீரர்கள் 75 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட தேசிய கொடியை தனி படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்கு எடுத்துச் சென்றனர். அதை விவேகானந்தர் நினைவு மண்டபம் முன்பு தங்களது கைகளில் ஏந்தியபடி நின்று மரியாதை செலுத்தினர்.

பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *