Category: மாவட்ட செய்திகள்

குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி.

பெரம்பலூர் ஆக, 30 பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான கபடி, வளையப்பந்து, கேரம், கோகோ ஆகிய விளையாட்டு போட்டிகள் வரிசைபட்டியில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்…

விவசாயிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்.

விருதுநகர் ஆக, 30 விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வத்திராயிருப்பு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வழிகாட்டுதலின் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சியில் வத்திராயிருப்பு பகுதியில்…

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல். பெண்கள் உள்பட 32 பேர் கைது.

நெல்லை ஆக, 30 மின்சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை தனியார் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை…

முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து மாஞ்சோலை தொழிலாளி வெளியிட்ட வீடியோ வைரல்.

நெல்லை ஆக, 30 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 7,8-ந் தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வருகிறார். இந்நிலையில் மாஞ்சோலை தொழிலாளி ஸ்டாலின் என்பவர், முதலமைச்சர் எங்கள் பகுதிக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி…

சிட்டுக்குருவி குறித்து விகேபுரம் டாணா பள்ளியில் விழிப்புணர்வு!

நெல்லை ஆக, 30 நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டாணா தேசிய துவக்கப்பள்ளியில் சிட்டு குருவி இனம் பெருக மாணவர்களிடையே விழிப்புணர்வு முகாம் நடந்தது. இம்முகாமிற்கு தேசிய துவக்கப் பள்ளியில் தாளாளர் லலிதா அந்தோணியம்மாள் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக…

ஜெயலலிதா அண்ணன் மகள் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை ஆக, 30 ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அவர் அரசியலில் நுழைந்து திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் தினமும் தொண்டர்களை சந்தித்து வந்தார். இதனால் அவரது வீட்டில் தினமும்…

நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம் ஆக, 30 நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் – ஓ.பி.எஸ்.

சென்னை ஆக, 30 வேண்டுவோர்க்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாக கருதப்படும் வேழமுத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டடும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும்…

ஜெயம் ரவிக்கு குவிந்துள்ள பட வாய்ப்புகள்.

சென்னை ஆக, 30 தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் ஜெயம் ரவி. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது.…

முதலமைச்சர் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு.

சென்னை ஆக, 30 சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்த மாநாட்டில் பல்கலைக்கழகங்களின் தரத்தை…