சென்னை ஆக, 30
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் ஜெயம் ரவி. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்துக்கு பின்னர் ஜெயம்ரவிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்தவகையில் இவர் கைவசம் அகிலன், இறைவன், ஜன கன மன, ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம், ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 என 6 படங்கள் உள்ளன. இதில் கல்யாண் இயக்கியுள்ள அகிலன் படம் வருகிற செப்டம்பர் 16 ம் தேதி ரிலீசாக உள்ளது. அதேபோல் இறைவன், ஜன கன மன ஆகிய இரண்டு படங்களையும் அஹமத் இயக்கி உள்ளார்.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதன்படி சைரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இதுவாகும்.