Spread the love

நாகப்பட்டினம் ஆக, 30

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 185 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து நாகை வட்டம், செல்லூர் கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி முபாரக் என்பவருக்கு மாற்றுதிறனாளி நலத்துறை சார்பில் ஊன்றுகோலையும், ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சத்யா என்பவருக்கு உதவித்தொகைக்கான ஆணையையும், பாலையூர் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் பக்கிரிசாமி என்பவருக்கு முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணையினையும் ஆட்சியர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *