நாகப்பட்டினம் ஆக, 26
நாகை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடந்தது.
இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க கடந்த 1 ம்தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 3 ம்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதன் மூலம் ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்க முடியும். அனைவரும் இணையதளம் மூலமும் ஆதார் எண்ணணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க முன் வர வேண்டும்.
மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம். 100 சதவீதம் இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தினை எவ்வித தொய்வுமின்றி 100 சதவீதம் செயல்படுத்திட அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கூறினார். இதில் உதவி ஆட்சியர் முருகேசன், வட்டாட்சியர்கள் கார்த்திகேயன், சாந்தி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.