Author: Mansoor_vbns

அக்னிபாத் திட்டத்தின்கீழ் திருச்சியில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு.

திருச்சி நவ, 14 இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள். இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள்…

திருப்பத்தூர் வேளாண் திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு.

திருப்பத்தூர் நவ, 14 கலைஞரின் அனைத்து கிராம வேளாண் திட்டப்பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, திருப்பத்தூர் வட்டாரங்களில் 2021 -22 ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை திட்டங்களைவேளாண் திட்டங்களை…

சோழவரம் ஒன்றியத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதியில் அமைச்சர் ஆய்வு.

திருவள்ளூர் நவ, 14 கொசஸ்தலை ஆற்றின் கரை கடந்த ஆண்டு பெய்த மழையின் போது உடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தேவையான முன் எச்சரிக்கை பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு பாடியநல்லூர் விச்சூர் வெள்ளிவாயல்…

பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி, பிஸ்கட், பால் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.

வேலூர் நவ, 14 விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் வாரத்தில் 1 நாள் ரொட்டி, பிஸ்கட், பால், முட்டை சுண்டல் வழங்கி அவர்களின் ஆரோக்கியத்தை பேணிகாக்க வேண்டும் என நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி விஜய்…

ஷார்ஜாவில் WIT (Where In Tamilnadu) பெண்கள் அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம்.

துபாய் நவ, 14 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா மியா மாலிலுள்ள (NESTO) நெஸ்டோ ஹைப்பர் மார்க்கட்டில் வளாகத்தில் WIT (Where In Tamilnadu) என்ற பெண்கள் அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இக் கொண்டாட்டத்தில் அமைப்பின் தலைவி மெர்லின்…

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்.

கரூர் நவ, 14 குளித்தலை நகராட்சி மற்றும் கிராம பகுதி உள்பட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 269 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்கள் நடந்தது.…

சேதமடைந்த சாலையில் மரக்கன்று நடும் போராட்டம்.

திண்டுக்கல் நவ, 14 திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்த நிலையில் கடந்த 1 வாரமாக பெய்த கனமழையால் மேலும் சேதமடைந்தது. எனவே மழை மற்றும் பாலப்பணிகளால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை…

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு.

நாகர்கோவில் நவ, 14 குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்து வந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் நிரம்பியுள்ளது. இந்த நிலையில்…

கீழக்கரை பொதுமக்களுக்கான இலவச வாகன சேவை.

கீழக்கரை நவ, 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், “நம்ம கீழக்கரை வெல்ஃபேர் கமிட்டி”யின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மேலத்தெரு வெள்ளை மாளிகை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கமிட்டியின் மூத்த உறுப்பினர்களான சீனா தானா(எ) அல்ஹாஜ் செய்யது…

பஞ்சாபில் நிலநடுக்கம்.

பஞ்சாப் நவ, 14 பஞ்சாபில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அமிர்தசரஸ் நகரில் இருந்து 140 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.45 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில்…