பஞ்சாப் நவ, 14
பஞ்சாபில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அமிர்தசரஸ் நகரில் இருந்து 140 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.45 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.