திருவள்ளூர் நவ, 18
திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேங்கிய மழைநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு மழையால் நோய் தொற்று ஏற்படாத வகையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். முகாமில் 350 பேருக்கு சளி, இருமல், காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.